முகப்பு > மரண அறிவித்தல்கள் > சிவபாக்கியம் செல்வரட்ணம்

திருமதி. சிவபாக்கியம் செல்வரட்ணம்

தோற்றம்: 08/07/1935 - மறைவு: 21/02/2021

மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், மாதகல், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இறுதியாக வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்வரட்ணம் அவர்கள் இன்று (21-02-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 5:00 மணியளவில் வவுனியாவில் காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, இலட்சுமிபிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற வைரமுத்து செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
பாஸ்கரன் (நெளுக்குளம்), காலஞ்சென்ற செல்வரஞ்சினி, கலைவாணி (தமிழ்நதி - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, இராமசாமி மற்றும் தவமணி, துரைசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
செந்தூரன், மயூரன், அரவிந்தன், பிரதீபா, அருணி, யுகப்பிரியா, உமாசுதன், உமாப்பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
வேனிலவன், பகீரதி, இலக்கியன், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை நண்பகல் (22ஆம் திகதி திங்கட்கிழமை) இலக்கம் 71-1, மன்னார் வீதி, மூன்றாம் கட்டை, நெளுக்குளம், வவுனியாவில் நடைபெற்று தகனத்திற்காக நெளுக்குளம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு:
பாஸ்கரன் (மகன்) 94770759546
கலைவாணி - தமிழ்நதி (மகள்) 94770530103
 
தகவல்
குடும்பத்தினர்


Back to Top