யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி விக்கினேஸ்வரராஜா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
காலஞ்சென்றவர்களான லாசரட் அழகரட்ணம் அல்பிரட் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. ஊதிகா அவர்களின் ஆசைக் கணவரும்,
Dr. காயத்திரி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. ரஜீவ்குமார், Dr. ரகுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகராசா, காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பஞ்சாட்சரதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கந்தசாமி, அமிர்தரஞ்சினி, சின்னத்துரை, விஜயமாலா, காலஞ்சென்ற மனோன்மணி, சந்திரிக்கா, தேவிக்கா, ரவி, சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரவணன், முகுந்தன், கார்த்திகா, ஐங்கரன், ஸ்ரீரங்கன், பிரசன்னா, கெளதமி, சங்கீர்த்தன், காலஞ்சென்ற பிரசாத், துளசி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும், தீபா, ஐஸ்டின், ஸ்ருதி, ஸ்டீவ் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும், கஸ்தூரி, கெளரிசங்கர், பவித்திரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும், தேவ்ராஜ் அவர்களின் ஆருயிர் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.